கோடநாடு வழக்கு: கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை

கோவை: கோடநாடு வழக்கில் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரிடம் நேரடியாக அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் முதன் முறையாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். கடந்த முறை நடராஜன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இன்றைய தினம் கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் நடராஜன் நேரில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் தற்போது விசாரணையானது துவங்கி உள்ளது.

சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கி தற்போது பல்வேறு முக்கிய தகவல்களையும், ஆதாரங்களையும் திரட்டி வரும் நிலையில் முதல் முறையாக நடராஜனும் இன்றைய தினம் ஆஜராகி உள்ளார். விசாரணை முடிந்த பிறகு மீண்டும் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் அறிவுறுத்துவார்களா என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post கோடநாடு வழக்கு: கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: