அதற்கேற்ற சென்னை கடற்கரை, செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் இயக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரியது. இதை அடுத்து 12 பெட்டிகள் கொண்ட 2 ஏசி மின்சார ரயில்களை தயாரிக்க சென்னை ஐசிஃப்பிற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. சென்ற மாதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் முதல் ஏசி மின்சார ரயில் கடந்த 20 ஆம் தேதி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ஏசி மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
The post கோடை வெயிலுக்கு குளுகுளு என பயணிக்க காத்திருக்கும் மக்கள்: சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடத்தில் விரைவில் ஏசி ரயில் appeared first on Dinakaran.
