தகவலறிந்து டவுன் போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் வெடிகுண்டு வீசுவதாக பேசியுள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீமானை தொகுதியில் இருந்து வெளியேற்றி அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
தபெதிகவினர் மீது நாதகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றனர். அதற்கு போலீசார், ‘‘சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
The post நாதக வேட்பாளரை தகுதி நீக்க போராட்டம்: சீமானையும் கைது செய்யக்கோரி தர்ணா appeared first on Dinakaran.
