மேலும் கால்நடை கழிவுகளை தின்பதற்காக நாய்களும் பன்றிகளும் ஓடிவருவதால் வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், மணலி மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘’சில தனியார் நிறுவனங்கள் திருட்டுத்தனமாக வந்து சாலையோரங்களில் கழிவுகளை கொட்டி வைத்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது’ என்றனர்.
The post கொசப்பூர் அருகே உள்ள புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.
