இதையடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த மனு சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post போதைப்பொருள் வழக்கில் கைதான மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
