பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி அனிதாவின் கணவர் கோட்டீஸ்வரன் டாக்டர்களை அணுகிய போது, அலட்சியமாக இருந்தாக தெரிகிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை அனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை தொடங்கினர். இந்நிலையில் நேற்று காலை பிரசவத்தின் போது ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் தாயும் இறந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அனிதாவின் உறவினர்கள் டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களால், மனைவி அனிதாவும், குழந்தையும் இறந்துள்ளதாக கோட்டீஸ்வரன் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேலூரில் பிரசவத்தின்போது சென்னை காவலரின் மனைவி, குழந்தை பலி: டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.
