முரசொலி செல்வம் மறைவு: திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் இரங்கல்

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலி செல்வம் சிறந்த பண்பாளர், சிறந்த நிர்வாகி, மிகவும் எளிமையானவர். முரசொலி பத்திரிகையின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர் என்று தெரிவித்ததுடன். முரசொலி செல்வத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். முரசொலி செல்வம் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலி செல்வம் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பு. முரசொலி செல்வத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிகை துறையினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: