மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

 

மயிலாடுதுறை, ஆக.22: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மயிலாடுதுறை மாவட்ட 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில், நாளை காலை10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு. மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

 

The post மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: