அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு பேருந்து தொடக்க விழா

அறந்தாங்கி, செப்.12: அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து நேற்றுமுன்தினம் இயக்கப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி உள்ளது. அறந்தாங்கி பகுதியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் அதிகபடியாக நபர்கள் செல்வதால் படுக்கைவசதியுடன் கூடிய புதிய பேருந்து அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்து படுக்கை வசதியுடன் கூடிய புதிய பஸ் சென்னைக்கு இயக்கப்பட்டது. படுக்கைவசதியுடன் கூடிய அரசு பஸ்சை வரவேற்கும் விதமாக அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் புதிய பஸ் ஓட்டுனர், நடத்துனர் இருவருக்கும் சால்வை அணிவித்து கொண்டாடினர். அறந்தாங்கியில் இருந்து படுக்கைவசதியுடன் கூடிய புதிய பஸ் இயக்கியத்திற்க்கு தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு பேருந்து தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: