மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

 

தேனி/பெரியகுளம், ஜூலை 27: தேனி தாலுகா சிபிஎம் கட்சி சார்பில் தேனியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் பொன்னுத்துரை தலைமை வகித்தார். காமுத்துரை மற்றும் வீரமணி முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தாலுகா செயலாளர் தர்மர் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் பெரியகுளத்தில் மின்வாரிய நகர் பிரிவு அலுவலகம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி தாலுகா செயலாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெண்மணி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்இராமச்சந்திரன் பேசினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ராமர், மன்னர்மன்னன், கணேசன், காளிச்சாமி சுப்பிரமணி, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: