சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று பேசிய நினோங் எரிங், ‘நம் அண்டை வீட்டாரை(சீனா) நம்ப முடியாது. அவர்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. நதிநீர் முழுவதையும் திசை திருப்பலாம். சியாங் ஆற்றில் ஒரே நேரத்தில் தண்ணீரை விடுவித்தால் முன்னெப்போதும் இல்லாத வெள்ளம் அருணாச்சலில் அழிவை ஏற்படுத்தும். இந்த அணையை சீனா கட்டுவது இந்தியாவை மட்டுமல்ல, வங்கதேசத்தையும் பாதிக்கக்கூடும். மக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்ய முடியாது. நமது குறிக்கோள் ‘தேசம் முதலில்’ என்று இருக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாம் சிந்திக்க வேண்டும். எனவே அப்பகுதியில் வெள்ளத்தைத் தடுக்க நீர்த்தேக்கத் திறன் கொண்ட அணைகளை நாமும் கட்ட வேண்டும்’ என்று பேசினார்.
The post அருணாச்சலபிரதேச எல்லை அருகே சீனா கட்டும் மெகா அணை: பா.ஜ எம்எல்ஏ கவலை appeared first on Dinakaran.