கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

திட்டக்குடி,: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் கண்ணன் (65). இவர் நேற்று ம.புடையூர் ஏரி அருகே சிவஞானம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கண்ணன் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் நிலை அலுவலர் சண்முகம் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கிணற்றில் சடலமாக கண்ணன் உடலை மீட்டனர். பின்னர் ராமநத்தம் போலீசார், கண்ணன் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிணற்றில் விழுந்து முதியவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: