9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை போக்சோ சட்டத்தில் வழக்கு வந்தவாசி அருகே

வந்தவாசி, ஜூலை 4: வந்தவாசி அருகே 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. வந்தவாசியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பாட்டி வீடும் அதே கிராமத்தில் உள்ளது. மாணவி பாட்டி வீட்டிற்கு செல்லும்போது வினோத்குமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் அடிக்கடி தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து அவரது தாயார் இரும்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், மாணவி 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 18 வயது பூர்த்தியடைந்த மாணவி கர்ப்பமாக இருப்பது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்ெபக்டர் சாந்தி போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள வினோத்குமாரை வலைவீசி தேடிவருகிறார்.

The post 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை போக்சோ சட்டத்தில் வழக்கு வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Related Stories: