சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

வாடிப்பட்டி, ஜூலை 4: மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (37). இவர் சம்பவத்தன்று சமயநல்லூர்- விருதுநகர் நான்கு வழிச்சாலை வைகை பாலம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்புறமாக திருமங்கலத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியராஜனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டியராஜனின் தாய் சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: