மின் கம்பத்தில் பைக் மோதி காயமடைந்த வாலிபர் பலி

தூத்துக்குடி, ஜூலை 2: தூத்துக்குடியில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் காயமடைந்த வாலிபர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சக்தி வேல் (22). இவரும், இவரது நண்பரான செல்வகுமார் (23) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். சத்யாநகர் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், அருகே இருந்த மின் கம்பத்தில் மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சக்திவேல் இறந்தார். செல்வகுமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின் கம்பத்தில் பைக் மோதி காயமடைந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: