அடுத்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கலாம்

சட்டப்பேரவையில் நேற்று அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, ‘‘அதிமுக உறுப்பினர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் பேரவையில் இருந்து நீக்கி வைப்பதாக முன்மொழியப்பட்ட தீர்மானம் பேரவையில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல்வரின் பரிசீலனைையை ஏற்று, கூட்டத்தொடர் என்பதை கூட்டம் என மாற்றிக்கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்’’ என்றார். இதையடுத்து தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.

The post அடுத்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: