மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ்பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாஜ எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சாக்ஷி மாலிக் உள்பட 6 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பிரிஜ் பூஷன் மீது 5 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 354, 354ஏ மற்றும் 354டி ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். மேலும் மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் உதவி செயலாளர் விநோத் தோமர் மீது 506 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

The post மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ்பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: