காவிரி விவகாரத்தில், அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட வைக்க முடியாது. ஒழுக்காற்று குழு பாரபட்சமாக செயல்படுகிறது. ராணுவத்தின் உதவியுடன் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். பாஜ நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைய போவதால், நோட்டாவின் கீழ் வாக்கு பெறுவதற்கு அண்ணாமலை தயார் ஆகிறார்.
கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தை தமிழக அரசு முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, நடிகர் மன்சூர் அலிகான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.