குளித்தலை அருகே ரூ.71 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

 

குளித்தலை, ஏப். 10: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை குழு அதிகாரிகள் குளித்தலை தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவல்காரன்பட்டியிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரிia சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டி என்ற முகவரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் ரூ.71,000/- இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த தொகைக்குரிய சரியான ஆவணம் ஏதும் சமர்ப்பிக்காததால், பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் இடம் ஒப்படைக்கப்பட்டு, அத்தொகையினை பாதுகாப்புக்காக குளித்தலை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post குளித்தலை அருகே ரூ.71 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: