தோகைமலை அருகே பைக்குகள் மோதல்: எலக்ட்ரீஷியன் படுகாயம்

 

தோகைமலை, மார்ச் 28: தோகைமலை காவல் சரகம் கொசூர் ஊராட்சி குப்பாண்டியூரை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் கார்த்திக் (22). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் தோகைமலைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். குளித்தலை – மணப்பாறை சாலையில் கழுகூர் ஊராட்சி வெண்ணிலாபுரம் அருகே வந்தபோது எதிரே ஈச்சங்காட்டுப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் கார்த்திக் (23) என்பவர் ஓட்டி வந்த பைக் கார்த்திக் பைக் மீது அதிவேகமாக வந்து மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட குப்பாண்டியூர் கார்த்திக் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காயமடைந்த கார்த்திக் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஈச்சங்காட்டுப்பட்டி பகுதி கார்த்திக் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தோகைமலை அருகே பைக்குகள் மோதல்: எலக்ட்ரீஷியன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: