தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவர் கைது

தோகைமலை மார்ச் 24: தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். தோகைமலை காவல் சரகம் கல்லடை ஊராட்சி கல்லடை மெய்யப்பன் மகன் முத்துச்சாமி ( 64). இவர் அதேபகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் அந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது முத்துச்சாமி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

The post தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: