உப்பிடமங்கலம் பேரூராட்சியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கிருஷ்ணராயபுரம், மார்ச் 22: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கோலங்கள் உறுதிமொழி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பது நமது கடமை, அனைவரும் வாக்களிக்குமாறும், வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், நமது இலக்கு 100 சதவீதம் வாக்களிப்பது என அனைத்து வாக்காளர்களும் இதில் மகளிர் திட்டம் உதவி அலுவலர்கள். எஸ்.சிந்து, அன்பு ராஜா, கார்த்திகேயன், சுப்பிரமணியன், உப்பிடமங்கலம் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் சமுதாய அழைப்பாளர் பா.தீபா மேலும் ஏராளமான சுய உதவிக்குழு மகளிர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post உப்பிடமங்கலம் பேரூராட்சியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: