மீனவர்கள் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்: இந்தியாவின் போதைப் பொருட்களின் மையமாக குஜராத் மாநிலம் விளங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்து, சிறை தண்டனை விதிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதை, இந்திய அரசு தடுக்கத் தவறி விட்டதாக கூறி மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்தியாவின் போதைப் பொருட்களின் மையமாக குஜராத் மாநிலம் விளங்குவதாகவும், தமிழக மீனவர்களுக்கு உயிருக்கும் உடைமைகளுக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பிலாத சூழல் நிலவுவதாகவும் கூறினார். மீனவர்கள் மீதான தாக்குதலில் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

The post மீனவர்கள் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: