கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு 3 மீனவர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு

சென்னை: சென்னை மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார், ஊரூர் குப்பத்தை சேர்ந்த சரவணன், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பாரதி உள்ளிட்ட 12 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆணைய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள பாரதி கூறுகையில், ‘‘கடலோர பகுதிகளில் உள்ள எந்த மாவட்டமாக இருந்தாலும், உள்ளூர் மீனவர்களை சேர்க்காமல் எந்த திட்டத்தையும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். அதேபோல், மாவட்ட மண்டல ஆணையத்தில் மீனவர்களை சேர்க்க கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்திருந்தோம். அதன் பலனாக கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு எங்களின் கோரிக்கையை அரசு ஏற்று உறுப்பினராக ஆணையத்தில் சேர்த்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. ’’ என்றார்.

The post கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு 3 மீனவர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: