கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் கிராமத்தில் மழையூர் மேம்படுத்த பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மழையூர் அரசு மேல்நிலை பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது பல் மருத்துவ முகாமிற்கு பல் மருத்துவர் சக்கரவர்த்தி தலைமை வகித்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பல் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிதம்பர ராஜா, விக்னேஷ் ஆகியோர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பல் பாதுகாப்பு குறித்தும் போதை பொருள் ஒழிப்பு குறித்தும் பல்லை எந்த வகையில் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு நலக்கல்வி அளித்தனர். முகாமில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பற்களை பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
The post மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.