தூய்மை பணியாளரிடம் பணம் பறித்த 3பேர் கைது

மேட்டூர், ஜூன் 29: மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன் (33). நேற்று முன்தினம், மேட்டூர் ஆர்.எஸ் மதுக்கடை அருகே மதுவாங்கி அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருமலைக்கூடலை சேர்ந்த கோபி (35), ராமமூர்த்தி நகரை சேர்ந்த அருள்குமார் (40), ரஞ்சித்குமார் (39) ஆகியோர் எங்களுக்கும் மது வாங்கி கொடு என கூறி தகராறு செய்தனர். பின்னர் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து, மாரியப்பனை தலையில் அடித்தனர். இதில் மாரியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவரது பாக்கெட்டில் இருந்த ₹750ஐ பறித்துக்கொண்டனர். இதனை தடுக்க வந்தவர்களையும் பீர் பாட்டிலை காட்டி விரட்டியுள்ளனர். இதில் காயடைந்த மாரியப்பன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கருமலைகூடல் போலீசார், கோபி, அருள்குமார், ரஞ்சித்குமார் ஆகிய 3பேரை கைது செய்தனர்.

The post தூய்மை பணியாளரிடம் பணம் பறித்த 3பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: