திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஜூன் 29: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகாராசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: