ஒட்டன்சத்திரம் பள்ளியில் காலை உணவு திட்டம் ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஜூன் 29: ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இப்பள்ளிக்கு வந்த நகராட்சி ஆணையர் ஆறுமுகம், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் உணவை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் விநியோகிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் பள்ளியில் காலை உணவு திட்டம் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: