தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிரான்ஸ்பார்மர் மின் கம்பத்தில் இருந்து தென்மேல்பாக்கம் மற்றும் வீராபுரம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலின்போது பலத்த காற்று வீசியது. அப்போது, இந்த மின் கம்பம் சேதமடைந்துள்ளது. எப்போது, மின் கம்பம் உடைந்து டிரான்பார்மர் கீழே விழுமோ என்ற அச்சத்தில் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
எனவே, மிகவும் ஆபத்தானநிலையில் மின் கம்பத்தின் அடியில் உடைந்து சிதறி கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் தெரியும் அளவுக்கு கிடக்கும் தென்மேல்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும். உடைந்து எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்சார கம்பத்தை மாற்றவில்லை என்றால் மிக பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
The post தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு கூடான டிரான்ஸ்பார்மர்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.