தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 41வது நாளாக தடை

தேனி: தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 41வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், கேரள மாநில மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். விடுமுறை காலங்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும்.

கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 41-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 41வது நாளாக தடை appeared first on Dinakaran.

Related Stories: