மழைநீர் வடிகால் பணிகளால் அம்பத்தூர் தொழிற்பேட்டை விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியது: டி.ஆர்.பி.ராஜா

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை அரசு சிறப்பாக மேற்கொண்டதால் அம்பத்தூர் தொழிற்பேட்டை விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தண்ணீர் வடிய சுமார் ஒரு வாரம் வரை ஆனது. தொழிற்துறையினரின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணியால் தற்போது மழைநீர் வேகமாக வடிந்துள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தண்ணீர் தேங்கியதற்கு ஏரிக்கரை ஆக்கிரமிப்புகளும் காரணம். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதியளித்தார்.

The post மழைநீர் வடிகால் பணிகளால் அம்பத்தூர் தொழிற்பேட்டை விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியது: டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Related Stories: