புரட்சி பாரதம் கட்சியினர் கூறுகையில், ‘’சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பணியினை வேகப்படுத்தி முடித்துக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப இருக்கிறோம். ரெட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை திறக்க புரட்சி பாரதம் கட்சி முன்னின்று செயல்படும்’ என்றனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் சரத்குமார், தேவேந்திரன், யுவராஜ், மதுராந்தகம், சித்தாமூர், இலத்தூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
The post தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தை திறக்கவேண்டும்: புரட்சி பாரதம் கோரிக்கை appeared first on Dinakaran.