நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு தங்கள் பிடித்த மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகளை வாங்குவதற்காகவும், உணவு பொருட்களை வாங்குவதற்கும், உவரி அருகே வந்துள்ளனர்.அப்போது உவரி பகுதியிலுள்ள கடலின் ஆழம் குறித்து சரியாக தெரியாததால் விசைப்படகு தூண்டில்பாலம் அருகே வந்த போது தரைதட்டி நின்றது. பெறுமுயற்சிக்கு பின்னர் மேலும் இரண்டு படகுகளின் உதவியுடன் தரைதட்டி நின்ற விசைப்படகு மீட்கப்பட்டது. இதனிடையே உவரிக்கு வந்த ராதாபுரம் மீன்வளத்துறை காவல் உதவி ஆய்வாளர் விசைப்படகில் வந்த மீனவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
The post நெல்லை உவரி தூண்டில் பாலம் அருகில் தரை தட்டிய விசைப்படகு: மீனவர்களின் பெறுமுயற்சிக்கு பின்னர் மீட்பு appeared first on Dinakaran.