மேலும் இந்த ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக 1.05 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும், நெல்லைக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக 6.05 மணிக்கு சென்றடையும். கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் முன்னதாக மதியம் 2.50 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The post அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரிலிருந்து 20 நிமிடம் முன்னதாக புறப்படும்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.