ராக்கெட் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ராகெட்டின் உள் சோதனைகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இன்று காலை 11.50 மணிக்கு ராக்கெட் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கி உள்ளது.இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆதித்த்யா எல்-1 விண்கலத்தை போன்று சிரிய அளவிலான மாதிரியை ஏழுமலையான் கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஏழுமலையான் கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
The post ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்!! appeared first on Dinakaran.