சேலம் இளைஞரணி மாநாடு மதுரையில் ஆக.27ல் செயல்வீரர் கூட்டம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

 

மதுரை, ஆக.25: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாடு தொடர்பாக மதுரையில் வரும் 27ம் தேதி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது என்று மாவட்ட செயலாளரான அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில திமுக மாநாட்டில் எழுச்சியுடன் பங்கேற்று சிறப்பிப்பது உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே உள்ள குறிஞ்சி திருமண மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.எம் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் பெருந்திரளானோர் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட செயலாளரான, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post சேலம் இளைஞரணி மாநாடு மதுரையில் ஆக.27ல் செயல்வீரர் கூட்டம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: