காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியா மருத்துவமனையில் பணி புரிய விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: சவுதி அரேபியா அமைச்சகத்தில் மருத்துவமனைகளில் பணி புரிய ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், மற்றும் எச்ஆர்டீ சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் தேவைப்படுகிறார்கள். மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள், குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் (95662 39685, 63791 79200, 044- 2250 5886. 2250 2267) வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்டுகளோ கிடையாது.

விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனது செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியா மருத்துவமனையில் பணி புரிய விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: