நல்லம்பள்ளி, மார்ச் 16: குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து, ஹைட்ரஜன் பெராக்சைடு ஏற்றிய டேங்கர் லாரி, கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குஜராத்தை சேர்ந்த ரமீஜ்(27) என்பவர் ஓட்டி வந்தார். நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தாறுமாறாக ஓடி தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தஇ சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றி, வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.