குடியாத்தம், மார்ச் 3: சைனகொண்டா கூட்ரோடு- மோர்தானா கிராமம் வரை ₹5.20 கோடி மதிப்பீட்டிற்கான சாலை பணி மற்றும் மேம்பாலம் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகொண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா கிராமம் வரை செல்லும் சாலையை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹5 கோடியே 20 லட்சத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகிறது. இப்பணி 8 கிலோ மீட்டர் சாலைப்பணிகள் மந்தகதியில் நடப்பதாக கூறப்படுகிறது.