தர்மபுரி: சர்வதேச தொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 28 குழந்தைகளுக்கு மின் விசிறி வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்கள் ஆயிரம் பேருக்கு மாலை உணவு வழங்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையில் சர்வதேச தொண்டு நிறுவன தின நாளில் பிறந்த 28 குழந்தைகளுக்கு மின்விளக்குடன் கூடிய மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் ராஜகோபால், சங்கர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சீட்ஸ் சரவணன், சதீஷ், செந்தில் ராஜா, பிரகாஷ், விஜயகுமார், சிவக்குமார், ராமசாமி, முருகேசன், ரங்கநாயகி, பொம்மிடி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.