கடத்தூர், பிப். 25: கடத்துார் ஒன்றியம், ஒசஅள்ளி ஊராட்சி வேடியூரில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், 2021-2022ம் ஆண்டில், ஒசஅள்ளி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள், வழங்கப்பட்ட ஊதியம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
