வாலிபர் மீது தாய் புகார்தர்மபுரி, பிப்.25: பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி காலனி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ம்தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய், பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார். அதில் பாலக்கோடு கடமரை பகுதியை சேர்ந்த சாம்ராஜ் மகன் சபரி(19) என்பவர், தனது மகளை கடத்திச்சென்று இருக்கலாம் என்றும், மகளை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
