தர்மபுரி, பிப்.24: தர்மபுரி மாவட்டத்தில் 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிக்காக, 3.46 லட்சம் டோஸ்கள் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 871 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன.இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள 3 லட்சத்து 46,500 டோஸ் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வரும் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலுமாக 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக, கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.