தர்மபுரி செப்.30: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. வாகனங்களை சுத்தம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், செக்கரப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை 3 மணி அளவில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.