தர்மபுரி, செப்.30: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக 3வது முறையாக தடங்கம் பெ.சுப்ரமணி தேர்வு செய்யப்பட்டு நியமிக்கட்டுள்ளார். இவர் இன்று (30ம்தேதி) சென்னையில் இருந்து தர்மபுரி திரும்புகிறார். இவருக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணியை 3வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்து நியமித்துள்ளார்.