கடத்தூர், செப்.30: தர்மரி மாவட்ட மேற்கு புதிய மாவட்ட செயலாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, திமுகவினர் கடத்தூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். கடத்தூர் பேரூர் செயலாளர் மோகன் முன்னிலையில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் கேஸ்மணி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முனிராஜ், ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார், வார்டு கவுன்சிலர் பச்சையப்பன், குணாகார்த்திக் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, திமுக கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.