ஓசூர், செப்.22: ஓசூர் மனவளக்கலை மன்றம் சார்பில், மனைவி நல வேட்பு விழா, ஓசூரில் நடந்தது. வேலூர் பேராசிரியர் பாபு தலைமையில் 300க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டு பூ, பழங்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். பெண்களுக்கு ஆண்கள் மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.