கரூர், ஆக. 23: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், கொள்ளுத்தண்ணிப்பட்டி பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த பகுதியில் டெய்லர் வேலை செய்து வருகிறேன். எனக்கு லட்சுமி என்ற மனைவியும், ப்ரித்தி, பிரவினா என இரண்டு மகள்களும், கதிர்வேல் என்ற மகனும் உள்ளனர். முதல் மகள் ப்ரித்தி, கரூர் மாவட்டம் வேங்காம்பட்டியில் வசித்து வரும் மாமியார் கருப்பாயி என்பவர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தார். 2020-21ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார்.