தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வத்தல்மலை உள்ளிட்ட 16 புதிய வழித்தடத்தில், பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து தொமுச தலைவர் சின்னச்சாமி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன். பொருளாளர் சேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (13ம்தேதி) மதியம், தர்மபுரி வருகிறார். அவர் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் 16 புதிய வழிதடத்தில் பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.