கரூர், ஆக. 10: கரூர் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கரூர் மாவட்டத்தின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆற்றில் திருமுக்கூடலூரைச் நோக்கிச் செல்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், கோவை, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்கள் பாசன வசதிகளை பெற்று வருகிறது. தற்போது, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறை வழியாக கரூர் நோக்கி வருகிறது.